சாளரம் நிறைத்த தீக்கொன்றைப் பூக்கள்
கூடுதல் செம்மை
துளி நாணமுமாய்
தெளிந்த வானில்
முகிலென ஓர் ஸ்பரிசம்
மெதுவாய் நகர்ந்திட
நிழலெனப் படர்ந்த அணுக்கம்
உதிர்ந்த ஒற்றைத் தீக்கொன்றை
தொலைவில் நனிவெயில்
நிலத்தில் வீழ்ந்த மலருக்கு
கிட்டியது
ஒற்றை முகிலும்
பற்றிட நிழலும்
இன்னும் அடர்சிவப்பாய்
இன்மதுவுடன்
புதுமலராய்
- வெண்பா கீதாயன்