ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி
அவனுக்கும் அவளுக்குமிடையே
சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள்
தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்
அவளைச் சூழ்ந்த யக்ஷர்கள்
இடைவெளிகளற்ற பைசாந்திய ஒலிகள்
சுவர்களிலிருந்து அவனை பற்றி இழுத்திடத் துடிக்கும் வளையல்களிட்ட கைகள்
அவளிதழின் துளிப் புன்முறுவல்
அவன் விரலைத் தீண்டிட
நொடிநேரக் கடவுள் ஆகினன்
மறுநொடியில் உபாசகன்
மீண்டும் கிடந்தகோலத் திருமேனியாகினள்
வண்ணத்தீற்றல்கள் இன்னும் பல ஆயிரங்களாய்