கானல் நீர் வழிந்திடும் வேனில்
இரவுக்கு ஏங்கும் நிலம்
பொல்லா தாகத்தைப் போக்கிடும்
ஓர் துளி ஆறென அவள்
பாலை உணராத பசுமை
எரிமீனொன்று விழுந்தது போல்
சடுதியில் அச்சான முத்தம்
போர்த்திய இரவினுள் எண்ணிலடங்கா விண்மீன்கள்
தனியே வெறித்த நிலவின் மீது
சிட்டிகைக் காதலைத் தூவிவிட்டு
அனிச்சையாய் மறைந்தாள்
வேனிலும் கலைந்தது
- வெண்பா கீதாயன்