Saturday, 10 February 2024

மகன்றில் களவு 12

கானல் நீர் வழிந்திடும் வேனில்

இரவுக்கு ஏங்கும் நிலம்

பொல்லா தாகத்தைப் போக்கிடும்

ஓர் துளி ஆறென அவள்

பாலை உணராத பசுமை

எரிமீனொன்று விழுந்தது போல் 

சடுதியில் அச்சான முத்தம் 

போர்த்திய இரவினுள் எண்ணிலடங்கா விண்மீன்கள் 

தனியே வெறித்த நிலவின் மீது 

சிட்டிகைக் காதலைத் தூவிவிட்டு 

அனிச்சையாய் மறைந்தாள்

வேனிலும் கலைந்தது


- வெண்பா கீதாயன் 

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...