Saturday, 10 February 2024

மகன்றில் களவு 12

கானல் நீர் வழிந்திடும் வேனில்

இரவுக்கு ஏங்கும் நிலம்

பொல்லா தாகத்தைப் போக்கிடும்

ஓர் துளி ஆறென அவள்

பாலை உணராத பசுமை

எரிமீனொன்று விழுந்தது போல் 

சடுதியில் அச்சான முத்தம் 

போர்த்திய இரவினுள் எண்ணிலடங்கா விண்மீன்கள் 

தனியே வெறித்த நிலவின் மீது 

சிட்டிகைக் காதலைத் தூவிவிட்டு 

அனிச்சையாய் மறைந்தாள்

வேனிலும் கலைந்தது


- வெண்பா கீதாயன் 

1 comment:

வேனிற்பூக்கள்

நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள் வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி  வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ?  பசலையுற்ற தேகம் கண்டு முதற்...