Saturday, 27 January 2024

மகன்றில் களவு 11

அவனிடம் சேராத கடிதங்கள்

அலமாரிக்குள் ஒளிந்து கிடந்தன

அவள் Scarlet வண்ண நகப்பூச்சுக்கு ஏக்கம்

 காற்றில் பரவிய இருவாச்சி வாசம்

பின்னிக் கொண்ட விரல்கள் 

பசையிட்ட இறுக்கம் 

பின்கழுத்தில் உரசும் மீசை

பாதங்களில் என்றுமில்லாத கூச்சம்

தள்ளிவிட்டவளிடம் மெய் சொல்லவா என்றான் 

அருகே இழுத்து அவள் சொல்லிய

மந்தணத்தை இரு நிழல்களும் அறியும் 

கடிதங்கள் மெதுவாகத் தம்மை 

வாசித்து நாணுற்றன

அலமாரி இன்னும் இறுக்கமாய் பூட்டிக்கொண்டது

மாடத்தில் படர்ந்த நிழல் கண்டு

இருவாச்சிப் பூக்கள் பசந்தன


- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...