Wednesday, 27 December 2023

மகன்றில் களவு 10

இடையோடு இழுத்து வளைத்திட

மீசையில் சிக்கிய அவளிதழ்

சிதறிய நித்திலப் பரல்கள்

எடுக்கவுமில்லை கோர்க்கவுமில்லை

நிரம்பி வழிந்த அமைதியைக் கலைத்தது

இருவரது மூச்சுக்காற்று

புடவை நாணத்தில் சுருங்கிற்று

காலம் கொஞ்சம் சலித்துகொண்டது

வெளிச்சத்திற்கு வெட்கமில்லை

சாளரத்தின் வழியே அழையா விருந்தாளியாய் நுழைந்தது

முழுவதுமாய் அவனுள் லயித்தாள்

அவனைப் பொருட்படுத்தவிலை

கடந்துசெல்லும் நிமிடங்களை கைகொள்ள முடியாதென்று


-வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...