Venba Geethayan
Tamil Author
Wednesday, 25 February 2026
இரவுக்களிப்பு
Saturday, 21 February 2026
பளிங்கு அரங்கு
Wednesday, 22 October 2025
மழை மோகம்
இரவின் சாளரம்
மெல்லிய மழைத்துளிகள்
இருளின் களிப்பாய் பொழிகின்றன
நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக்
கொட்டும் துளிகளைத் தொட்டன
கந்தர்வ ஸ்பரிசமாய்
கைகளைத் தழுவிய துளிகள்
நிலமும் உதிர்மலரும் மோகிக்கும் வாசனை
அவள் வாயிற்கதவத்தைத் தட்டின
முகில்கள் நிலவுக்கு முத்தமிட்டுக்
கடக்கும் பொழுதினில்
ஏற்பட்ட அணுக்கம் போன்றது
அவளுக்கும் அவனுக்குமான பற்று
தாமதிக்காமல் தாழ் திறந்தனள்
வீழ்ந்துலர்ந்த முல்லைகளாய் ஈசல்கள்
மழைத்துளி அஞ்சாது அவள் நுதல் தொட்டு
கழுத்தில் இறங்கியது
முழுவதுமாய் நனைந்து நிற்க
அங்கே இந்திரனின் மின்கீற்றாய் அவன்
மீண்டும் பெரும் கார்முகிலொன்று
இறுக்கமாய் நிலவை முத்தமிட்டது
முதற்கதிர் எழும்வரை...
Tuesday, 19 August 2025
ஓவியன் தீற்றிய இடைவெளி
ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி
அவனுக்கும் அவளுக்குமிடையே
சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள்
தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்
அவளைச் சூழ்ந்த யக்ஷர்கள்
இடைவெளிகளற்ற பைசாந்திய ஒலிகள்
சுவர்களிலிருந்து அவனை பற்றி இழுத்திடத் துடிக்கும் வளையல்களிட்ட கைகள்
அவளிதழின் துளிப் புன்முறுவல்
அவன் விரலைத் தீண்டிட
நொடிநேரக் கடவுள் ஆகினன்
மறுநொடியில் உபாசகன்
மீண்டும் கிடந்தகோலத் திருமேனியாகினள்
வண்ணத்தீற்றல்கள் இன்னும் பல ஆயிரங்களாய்
Saturday, 7 June 2025
Thug life vs Adam's life
Friday, 10 January 2025
பாவை மொழிகள் (4 - 6)
அரவம் துயிலும் பொருட்டு
மெதுவாய் அகழ்வில் ஊர
ஊரின் அரவம் கேண்மின் மடந்தாய்!
மாமைபடர் பிச்சி உச்சுகொட்டி வீழ்ந்திட
சூடாமலர்களின் தாபத்தைத் தணித்திட
அள்ளி அவன் அடியிட வேண்டாமோ?
கிள்ளிடும் பொன்பாவாய்!
//
அவன் தீண்டலுக்கு அடம்கொள்ளும்
மடித்து வைத்த இழைப்பட்டு
கசக்கியும் சுழற்றியும் சழக்காடிக்
கழற்றி எறிவானெனும் மதியின்றி
களவைத் தூண்டும் மடப்பட்டு
முந்தைய கூடலை நினைவுருத்தி
வருத்திடும் அணியிழையாய்!
//
புலரொளியில் நிலம்படர் ஈரம்
அவன் உள்ளங்கை மணம்
அந்த நாகலிங்கப் பூக்கள்
கண்டுகொள்ள எவருமற்ற மரத்தடி
ஒற்றை பூவின் மணத்தை
மந்தணமாய் மெல்ல
கள்ளமாய் நகைத்திடும் மார்கழி
உள்ளத்தைக் கொள்ளாய் மென்பாவாய்
//
Wednesday, 18 December 2024
பாவை மொழிகள் - 3
வைகறைத் தூறல் நிலம் நனைக்க
உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்
விண்ணுலகிலும் அலருமென
கந்தர்வன் அளித்ததன் கொடையவை
ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும்
கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்
துவள்விழியைத் திறந்திடுமின்!
பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்!
இரவுக்களிப்பு
திரைச்சீலைகளின் குவிப்புக்கு ஒருபுறம் அவளும் மறுபுறம் அவனும் சந்தித்துக் கொள்ளா விழிகள் வால்ட்ஸ் நடன இசை துவங்கியது மெய்மறந்து தியானிப்பதைப...
-
போதுமான அளவிற்கு கமலுக்கும் மணிரத்னத்திற்கும் திரைக்கதை எழுதுவது எப்படி வகுப்புகள் எடுக்கப்பட்டுவிட்டன. சமூக ஊடகத்தார் துவைக்கின்ற அளவுக்கு ...
-
ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான் அவளைச் சூழ்ந்...
-
திரைச்சீலைகளின் குவிப்புக்கு ஒருபுறம் அவளும் மறுபுறம் அவனும் சந்தித்துக் கொள்ளா விழிகள் வால்ட்ஸ் நடன இசை துவங்கியது மெய்மறந்து தியானிப்பதைப...