மாலையின் பொன்னொளியில்
பளிங்கு அரங்கின் ஓரத்தில்
கண்ணாடி மதிலுக்கு வெளியே
கரை தழுவிக் கடக்கும் கடலலைகள்
மேசையில் இரு பீங்கான் கோப்பைகள்
மெல்ல எழுகிற வாசனை
அகத்தின் துளி மோகம் போல்
அவன் விரல் நுனி ஸ்பரிசம் போல்
காஃபி கோப்பையின் கதகதப்பு
மழுங்கும் ஒளிக்கிடையே
பைசாந்திய முணுமுணுப்புகள்
அசையாத விழிகளின்
அறிந்திற்ற மொழியுணர்ந்து
நாண்களை மீட்டும் பாணன்
மிடற்றில் எழுந்த கசப்பாய்
வனதேவதையின் முத்தம்
மதுரப்பரல்கள் சேர்த்திட
மறைந்தனள் தேவதை
கையெழுத்தாய்
கழுத்தில் அவளது நகக்குறி
அவள் வருகையின் தடமென
அரங்கெங்கும் கிடந்தன லைலக் மலர்கள்...
No comments:
Post a Comment