Friday, 31 May 2024

மகன்றில் களவு 16

எங்கோ தொலைவில் இசைக்கும் கசல் 

மீள மீள 

ஈரடி சந்தங்கள் 

அன்பைச் சொல்ல இத்தனை சொற்கள் 

எத்தனை நிலவுகளைக் கண்டிருக்கும் இப்பிரியம் 

நிலவற்ற நாளிலும் கூட பிணைந்திருக்கும் 

ஆறு பருவங்களை சந்தித்திருக்கும்

எதிரெதிரே சந்தித்த விழிகள் சொல்லாத களவினை 

சொற்களால் அணிசெய்தல் அரிது 

எவ்வளவு கரவுகளை உள்ளம் கொள்ளும் 

இரவுகளின் முணுமுணுப்பு போல 

பாலை மொழியின் இசை தரும் தண்மை

என்றோ சந்தித்த விழிகளின் களவு 

அவளது யாழ் மீட்டியது 

ஈரடி சந்தங்கள் 

மீள மீள


- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

வேனிற்பூக்கள்

நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள் வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி  வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ?  பசலையுற்ற தேகம் கண்டு முதற்...