பிரிந்து கூடிடும் முகில்களின் ஒருநாள்
முகில்களற்ற தெளிந்த வானின் ஒருநாள்
பகலில் தெரியும் நிலவின் நாளும் கூட
பொழுதுகள் புலப்படா நாளும் அதுதான்
கருமுகில் உதிர்க்கும் முதற்துளியின் நாளது
அந்நாள்தனில் மொழிந்த சொற்கள்தாம்
கோடைகாலத்துப் பெருமழை
போதும் சொற்கள்
கோர்த்து அணிகலனாய் சுமந்திட
எடை தாளாது
முன்னொருநாள்
அரிவையின் கூந்தல் விலக்கி
சுவாசத்தின் சத்தம் கேட்டிடும் நெருக்கத்தில்
இதயத்தின் முணுமுணுப்பின் அணுக்கத்தில்
அவன் சொல்லிச் சென்ற வரிகள் சில
அவள் மேனியை அணிசெய்திடும் துகில்களென
நாணத்தைக் கவர்ந்து ஒளிந்தவனுக்கு
அவ்வரிகளை நினைவுபடுத்துமோ?
இந்நாட்கள்
- வெண்பா கீதாயன்
No comments:
Post a Comment