Wednesday, 3 April 2024

மகன்றில் களவு 14

பாலைச் சுரமென இரவு

பற்றிட நன்றாய் திண்தோள்

போதிய அளவாய் அணுக்கம்

நுதல் தொட்டு மிடறிறங்கும் வியர்வை

பவழமல்லி ஸ்பரிசமாய் உறுத்தும் மீசை

அறைமுனையில் மிளிரும் இருவிழிகள்

மெதுவாய் இருளில் நகர்ந்தது

ஊடலுக்கு ஆயத்தமாகும் பூனைக்குட்டி

மேசைமேல் குதித்தது 

புகைப்படச் சட்டகத்தைத் தட்டிவிட 

கொள்ளை பிரியம்

புகைப்படத்தில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் 

தலைவனும் தலைவியும் 

இன்னும் கட்டிக்கொண்டனர்

பூனை அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமல்

அமைதியாய் அறைக்கு வெளியே நடந்தது 


- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

மழை மோகம்

இரவின் சாளரம்  மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன  கந்தர்வ ஸ்பர...