பெரும்பொழுதுகள் பல கடந்து
யாமத்துத் துயில்களைத் துறந்து
ஆதியுகத்தினில்
காதலுற்ற அரிவையும் அவளவனும்
திகட்டும் முயக்கத்தில்
நிலத்தின் ஆழத்தில்
அமிழ்த்திய மதுக்குடுவை
அவனுக்குக் கிடைக்கப்பெற்றது
இக்கார்காலத்தில்
அம்மதுவின் துளி ருசி
அவளது காதல்
- வெண்பா கீதாயன்
No comments:
Post a Comment