Monday, 11 September 2023

மகன்றில் களவு 1

பெரும்பொழுதுகள் பல கடந்து
யாமத்துத் துயில்களைத் துறந்து
ஆதியுகத்தினில்
காதலுற்ற அரிவையும் அவளவனும்
திகட்டும் முயக்கத்தில்
நிலத்தின் ஆழத்தில் 
அமிழ்த்திய மதுக்குடுவை
அவனுக்குக் கிடைக்கப்பெற்றது 
இக்கார்காலத்தில் 
அம்மதுவின் துளி ருசி
அவளது காதல் 

- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...