Thursday, 21 September 2023

மகன்றில் களவு 3

சேடல் முகிழ் பொழுதது

மோதி விளையாடும் முகில்கள்

சிதறிய நூபுர முத்துப்பரல்கள் 

அடர்வன ஓர் வகிடுப் பாதையில் 

தேடிட நேரமன்று

என்றோ அவ்வழியே அவன் வரவு

தாள்தனில் உறுத்திய பரல்கள் 

கணப்பொழுதில் அவள் உரு

எழுந்து அணைந்தது 

வெறி கொண்ட அணங்கென 


- வெண்பா கீதாயன் 

1 comment:

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...