Tuesday, 26 September 2023

மகன்றில் களவு 4

பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை

நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்

நொடியில் பிடுங்கி மேசையில்

வீசினான்

சிதறிய மலர்களின் மணம்

நாணமுற்றன

அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை

அவன் மூச்சுக்காற்று சுவைத்த

நொடிதனில்

- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...