Tuesday, 26 September 2023

மகன்றில் களவு 4

பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை

நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்

நொடியில் பிடுங்கி மேசையில்

வீசினான்

சிதறிய மலர்களின் மணம்

நாணமுற்றன

அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை

அவன் மூச்சுக்காற்று சுவைத்த

நொடிதனில்

- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

மழை மோகம்

இரவின் சாளரம்  மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன  கந்தர்வ ஸ்பர...