Saturday, 7 October 2023

மகன்றில் களவு 5

துள்ளி வரும் அலைகளின் நீலம்

ஒட்டிக் கொண்டது பாதங்களில்

கூடலில் இருந்த நண்டுகளிடையே முணுமுணுப்பு 

கோர்த்துக்கொண்ட கரங்களுள் இருந்த வெப்பத்தில்

வான்வெளியில் இருந்து உருகிப் பொழிந்த உடுக்கள்

இறுக்கத்தில் தளர்ந்த முகில்கள் 

நாணமேதுமற்று ஒளிரும் வெண்கீற்று

ஸ்பரிசத்துடன் கலந்த மணல்

இருள்தான் இன்னுமொரு பொழுது நீடிக்கட்டும்

இத்தனை மிளிர்வுகளுக்கு இன்னொரு தருணம் அரிது

- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

மழை மோகம்

இரவின் சாளரம்  மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன  கந்தர்வ ஸ்பர...