வைகறைத் தூறல் நிலம் நனைக்க
உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்
விண்ணுலகிலும் அலருமென
கந்தர்வன் அளித்ததன் கொடையவை
ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும்
கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்
துவள்விழியைத் திறந்திடுமின்!
பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்!
வைகறைத் தூறல் நிலம் நனைக்க
உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்
விண்ணுலகிலும் அலருமென
கந்தர்வன் அளித்ததன் கொடையவை
ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும்
கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்
துவள்விழியைத் திறந்திடுமின்!
பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்!
அஞ்சனமிடாத விழிகள்
துயில் துறந்து விரிந்திட
சாளரம் விளிக்கின்ற வாசனை
சிலம்புடைந்த பரலென
சிதறும் தென்னமொக்குகாள்!
உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்
நின் விழிநிறை அறியாது மடவாய்!
கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று
தேகம் அணைத்திடும் குளிர்
பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு
புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்
கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள்
முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்
விழிதிறவாய் எம்பாவாய்!
இரவின் சாளரம் மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன கந்தர்வ ஸ்பர...