Tuesday, 17 December 2024

பாவை மொழிகள் - 2

அஞ்சனமிடாத விழிகள் 

துயில் துறந்து விரிந்திட

சாளரம் விளிக்கின்ற வாசனை 

சிலம்புடைந்த பரலென 

சிதறும் தென்னமொக்குகாள்! 

உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்

நின் விழிநிறை அறியாது மடவாய்! 

No comments:

Post a Comment

வேனிற்பூக்கள்

நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள் வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி  வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ?  பசலையுற்ற தேகம் கண்டு முதற்...