Tuesday, 17 December 2024

பாவை மொழிகள் - 1

கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று

தேகம் அணைத்திடும் குளிர்

பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு

புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்

கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள் 

முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்

விழிதிறவாய் எம்பாவாய்!



No comments:

Post a Comment

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...