அவன் பச்சை விழிகளுள்
தெரிகின்ற பசுமைக் காடுகள்
அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண்
தும்பிகளின் கூடற்களி
மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைகள்
பாறைகளில் அவிழ்ந்து நிற்கும் கதிர்காந்தப்பூக்கள்
அவன் மெதுவாக இமைத்து
மீண்டும் நோக்கினான்
இவ்விழிகளுள் தொலைவதைவிட வேறென்ன பேரின்பம்
அம்மரகதக் காட்டினில்
கதிர்காந்தப்பூ கொண்டு
காவியங்கள் படைத்தனள்