Thursday, 5 March 2026

ஆற்றின் நிலவு

ஆற்றின் குறுக்கே ஒளிமிகு படகொன்று
இருண்மையின் தேவதையாய் எழுந்த செந்நிலவு
புதர்மண்டிய கரைதனில்
ஓநாய்களின் உண்டாட்டு
செழுமையான மானின் நறுங்கொழுப்பினைக் கவ்வி இழுத்துவந்து
பெண் ஓநாய்முன் போட்டு
குருதி தோய்ந்த பற்கள் நகைத்திட 
காதலை மொழிந்தது ஆண் ஓநாய் 
பெண் ஓநாய் நாணிக் கொழுந்துண்டை மென்றது
செந்நிலவு தேவதை ஆசியைப் பொழிந்து
ஆகாயப்பொதியினுள் மறைந்திட 
ஓடத்தினின்று அவன் கை செவ்வல்லிதனை 
எட்டிப்பறித்திற்று
அருகே மேகலை சுற்றிய யிடைதனை யிழுத்து
தொய்யிலிட்ட மேனிக்கு சூடினன்
ஓநாய்கள் உன்மத்தமாய் பாடின
பேரியாழின் முழக்கமென... 

No comments:

Post a Comment

பச்சை விழிகள்

அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள்  அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண்  தும்பிகளின் கூடற்களி  மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...