Tuesday, 21 April 2026

யாமத்தின் வாசனை

துயில் மெதுவாய் கவிந்திடும் பொழுதினில் 
எவர் வரவுக்காய் அலரும் ஆம்பல்?
திரைகளை மெல்லத் தழுவிடும் வாடை
இடைமேகலையின் கனவினை அறிந்திடும்
துகிலின் நிந்தனை தாளாது
தொய்யில் இன்னும் சிவந்தது
மலர்கணை உடன் கிடந்திட
மாமுகில் பொழிந்திடும் மழையென 
மாமையை மாயையைக் களைந்திட
வாடிய வார்துகில் அவிழ்ந்திட 
வாடையின் வாடலும் கரைந்திட
மலர்ந்தனள் மற்றொரு ஆம்பலாய் மஞ்சத்தில் 
அறையெங்கும் யாமத்தின் வாசனை

No comments:

Post a Comment

காதல் - Madness vs Toxic

காதல் என்கிற உணர்வு முற்றிலும் madness சார்ந்தது. இயல்பாகவோ logicalஆகவோ consciousஆகவோ ஒருவர் இருந்தால் காதலில் விழவே முடியாது. தைரியமாக இருவ...