Saturday, 9 March 2024

மகன்றில் களவு 13

சாளரம் நிறைத்த தீக்கொன்றைப் பூக்கள்

கூடுதல் செம்மை

துளி நாணமுமாய்

தெளிந்த வானில் 

முகிலென ஓர் ஸ்பரிசம் 

மெதுவாய் நகர்ந்திட

நிழலெனப் படர்ந்த அணுக்கம்

உதிர்ந்த ஒற்றைத் தீக்கொன்றை

தொலைவில் நனிவெயில்

நிலத்தில் வீழ்ந்த மலருக்கு 

கிட்டியது 

ஒற்றை முகிலும்

பற்றிட நிழலும்

இன்னும் அடர்சிவப்பாய்

இன்மதுவுடன் 

புதுமலராய்


- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

பச்சை விழிகள்

அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள்  அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண்  தும்பிகளின் கூடற்களி  மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...