Tuesday, 12 September 2023

மகன்றில் களவு - 2

அதிகாலையா பின்னிரவா என்றறியாத வேளையில்

ஒளிரும் விண்மீன்களுக்கிடையே

ஏதோவொரு விண்மீன்

என் சாளரத்தில் அமர்ந்தது

அதனிடம் பெயர் கேட்க புரண்டு படுத்தேன்

அத்தனை மிளிர்வுடன்

நின்றொளிர்ந்தது

விழிகள் கூசிட

அவன் பெயர் இட்டேன்

இன்னும் நெருக்கத்தில் வந்தமர்ந்தது விண்மீன்

சாளரத் திரையை இழுத்துவிட்டு

கண்களை மூடிக் கொண்டேன்


-வெண்பா கீதாயன் 

1 comment:

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...