Saturday, 7 October 2023

மகன்றில் களவு 5

துள்ளி வரும் அலைகளின் நீலம்

ஒட்டிக் கொண்டது பாதங்களில்

கூடலில் இருந்த நண்டுகளிடையே முணுமுணுப்பு 

கோர்த்துக்கொண்ட கரங்களுள் இருந்த வெப்பத்தில்

வான்வெளியில் இருந்து உருகிப் பொழிந்த உடுக்கள்

இறுக்கத்தில் தளர்ந்த முகில்கள் 

நாணமேதுமற்று ஒளிரும் வெண்கீற்று

ஸ்பரிசத்துடன் கலந்த மணல்

இருள்தான் இன்னுமொரு பொழுது நீடிக்கட்டும்

இத்தனை மிளிர்வுகளுக்கு இன்னொரு தருணம் அரிது

- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

பச்சை விழிகள்

அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள்  அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண்  தும்பிகளின் கூடற்களி  மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...