Saturday, 8 August 2026

பார்வதி - தாஸ் & சந்திரா - வழிப்போக்கர்களின் பழிவாங்கல் கதை


வெகுநாட்களுக்குப் பிறகு 2010களின் ஒளி, காட்சியமைப்பு, நிலப்பரப்பு என அனைத்தும் நினைவுகூரப்படும் வகையில் கச்சிதமாக அருண் மாதேஸ்வரனால் செதுக்கப்பட்டுள்ளன. CCTV காமிராக்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழ்ந்த அநீதிகளும் அதற்கான பழிவாங்கும் படலமுமே கதை. கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், அதற்காக சிந்தும் குருதி என கதையில் மனிதனின் IDயும் egoவும் Adrenaline rushஐ அதிகரிக்கச் செய்கின்றன. 

உளவியலாளர்கள் பலரும் உளவியலில் ஒரு மனிதனின் செயல்பாடுகள் மற்றும் தன்மைகளை அவனது குழந்தைப்பருவம் தீர்மானிக்கும் என்பார்கள். DCயின் கதைமாந்தர்கள் அனைவருக்கும் இந்த Childhood trauma இருக்கிறது. பெரியவர்களாக மாறிய பிறகு அந்த inner childrenஇன் போராட்டம்தான் திரைக்கதை. 

இங்கே பெரியவர்கள் ஆன பின் குழந்தைப்பருவ காயங்களை மறந்து விடுவோம், அல்லது அதை cope up செய்ய கல்வி, வாசிப்பு, வேலைவாய்ப்பு, வசதி, பணம், போதை, கலவி என எதற்குள்ளாவது புகுந்துகொண்டு வெளியே நம் பால்ய இருண்மைகளை மறைத்துக்கொண்டு வாழ்கிறோம். ஆனால் இதற்கான வாய்ப்பற்றவர்கள் நிகழ்கால இருண்மையில் உழல்பவர்கள் மீள்வதற்கு பதிலடியாக வன்முறையை கையில் எடுக்க வேண்டியுள்ளது. அதை லோகேஷ் நடிப்பில் அற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார், தன்னை தேவதாஸாக முழுதாக அருணிடம் ஒப்படைத்துள்ளார். 

அதேபோல சந்திராவும் ஒரு மருத்துவரைத் தனக்கு கடந்த காலத்தில் நிகழ்த்திய அநீதிக்காக கன்னாபின்னாவென சுடுவார். பார்வதியும் தன்னுடைய ஆசையைத் தருணமாக வாழ்ந்துவிடுவார். இறுதியில் தாஸும் சந்திராவும் தமக்குக் கிடைக்காத குழந்தைப்பருவத்தை இன்னொரு சிறுவனுக்கு அளித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்கின்றனர். 

DC திரைப்படமானது inner child குறித்த பிரக்ஞை அற்றவர்கள் அல்லது நல்ல குழந்தைப்பருவம் கொண்டவர்கள், past trauma அற்றவர்களுக்கு வெறும் வன்முறையாக அல்லது தேவையற்றதாகத் தோன்றும். எப்போதும் LEDக்களுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கு இருண்மை கூச்சத்தைத் தரும். Devadas Chandra அந்த இருண்மையின் மின்மினிகள்.

#DC

No comments:

Post a Comment

காதல் - Madness vs Toxic

காதல் என்கிற உணர்வு முற்றிலும் madness சார்ந்தது. இயல்பாகவோ logicalஆகவோ consciousஆகவோ ஒருவர் இருந்தால் காதலில் விழவே முடியாது. தைரியமாக இருவ...