Monday, 11 September 2023

மகன்றில் களவு 1

பெரும்பொழுதுகள் பல கடந்து
யாமத்துத் துயில்களைத் துறந்து
ஆதியுகத்தினில்
காதலுற்ற அரிவையும் அவளவனும்
திகட்டும் முயக்கத்தில்
நிலத்தின் ஆழத்தில் 
அமிழ்த்திய மதுக்குடுவை
அவனுக்குக் கிடைக்கப்பெற்றது 
இக்கார்காலத்தில் 
அம்மதுவின் துளி ருசி
அவளது காதல் 

- வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

பச்சை விழிகள்

அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள்  அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண்  தும்பிகளின் கூடற்களி  மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...