Tuesday, 12 September 2023

மகன்றில் களவு - 2

அதிகாலையா பின்னிரவா என்றறியாத வேளையில்

ஒளிரும் விண்மீன்களுக்கிடையே

ஏதோவொரு விண்மீன்

என் சாளரத்தில் அமர்ந்தது

அதனிடம் பெயர் கேட்க புரண்டு படுத்தேன்

அத்தனை மிளிர்வுடன்

நின்றொளிர்ந்தது

விழிகள் கூசிட

அவன் பெயர் இட்டேன்

இன்னும் நெருக்கத்தில் வந்தமர்ந்தது விண்மீன்

சாளரத் திரையை இழுத்துவிட்டு

கண்களை மூடிக் கொண்டேன்


-வெண்பா கீதாயன் 

1 comment:

பச்சை விழிகள்

அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள்  அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண்  தும்பிகளின் கூடற்களி  மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...